Search This Blog

Thursday, April 5, 2012

து டு குக ல ந ந்நே தொ ர -thudukala nanne thora பல்லவி






பல்லவி 

து டு குக ல ந ந்நே தொ ர
கொடு குப் ரோசுரா எந்தோ (து)

அனுபல்லவி 
கடு து ர்விஷயாக் ரூஷ்டுடை
க டி ய க டி யகு நிண்டா ரு(து)

சரணம் :
1.ஸ்ரீ வனிதா ஹ்ரித்குமுதா ப் ஜ
அவாங்கமானஸ கோ சர


2. ஸகல பூ தமுலயந்து நீவை
யுண்ட கா மதி லேக போ யிந

3.சிறுத ப்ராயமுலநாடே பஜநாம்ருத
ரஸவிஹ ந குதர்குடைந

4.பரத நமுல கொறகு நொருல மதி
கரக ப லிகி கடு பு நிம்ப திரிகி நட்டி

5.தநமதி நி பு விநி சௌக் யபு ஜீவநமே
யநுசு ஸதா தி நமுலு க டி பே
6.தெலியநி நட விட க்ஷூ த் ருலு வநிதலு
ஸ்வவசமவுட குபதி சிஞ்சி
ஸந்த ஸில்லி ஸ்வர லயம்பு லெருங்க கநு
சிலாத்முலை ஸுப கதுலகு ஸமா நமநு


7.த் ருஷ்டிகி ஸாரம்ப கு லலநா ஸத நார்
ப க ஸேநாமித த நா து லநு
தேவாதி தேவ நெர நம்மிதி கா கநு
நீ பதா ப் ஜ ப ஜநம்பு மறசிந

8.சக்கநி முக கமலம்பு நு ஸதா
நாமதி லோ ஸ்மர ணலேகநே
து ர்மதா நந்த ஜனுல கோரி பரிதாப
முலசே த கி லி நொகிலி து ர்விஷய
து ராஸலநு ரோயலேக ஸத்த ம-
பராதி நயி  சபல சித்துட நைந

9.மாநவ தநு து  ர்லப மநுசு நெஞ்சி
பாமாநந்த மொந்த லேக
மத மத் ஸர காம லோப மோஹுலகு
தா ஸுடை மோஸபோ  தி கா க
மொத டி கு ல ஜூத கு சு பு விநி சூ த் ருல
பநுலு ஸல்பு நுண்டிநி கா க
நராத முலநு கோ ரி ஸாரஹீந
மதமுலநு ஸாதிம்ப தாருமாரு

10.ஸதுலகு கொ ந்நா ள்ளா ஸ்திகை
ஸுதுலகு கோந்நாள்ளு த ந
ததுலகை திரிகி திநய்ய
த் யாக ராஜாப்த இடுவண்டி
Meaning 
     கனத்த சிற்றின்பத்தால் இழுக்கப்பட்டு  நாழிகைதோரும்
மிகுந்த துடுக்குகள் (துஷ்டத்தனங்கள்) புரிந்துவரும்  என்னை
எந்த அரசகுமாரன் (சக்ரவர்த்தி திருமகன்) காப்பாற்றப்போகிறான்?
லக்ஷ்மிதேவியின் இதயமாகிய அல்லியை மலரச் செய்யும் சந்திரனே!
மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவனே!

     எல்லாப் பொருள்களிலும் உறைபவன் நீயேயென்பதை உணராமலும்,
சிறு வயது முதலே உன் பஜனையின் அமுத ரசத்தைப் பருகாமலும்
குதர்க்கத்தில் ஈடுபட்டேன். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு மற்றவர் மனம்
கரையுமாறு பேசி வயிற்றை நிரப்புவதர்காகத் திரிந்தேன். இய்யுலகில்
சுகமாக வாழ்வதே வாழ்க்கைப் பயனென்று கருதி நாட்களை கழித்தேன் .

     ஒன்றுமறியாத  நாட்டியக்காரர்கள், காமதூரர்கள். கீழ்மக்கள் , பெண்கள்
முதலியோரை வசம் செய்வதற்காக அவர்களுக்கு போதனை செய்து
சந்தோசமடைந்து. ஸ்வரம், லயம், முதலியவற்றை அறியாமல் கல் மனம்
கொண்டவனாக (இருந்தும்) சிறந்த பக்தர்களுக்கு நிகர் நானே" என்று இருமாப்படைந்தேன்.

     தேவாதிதேவனே!காண்பதற்கு மாத்திரமே சாரமாகவுள்ள பெண்டிர்,வீடு, மக்கள்,வேலைக்காரர், அளவற்ற செல்வம் முதலியவற்றை நம்பினேனே தவிர உன் திருவடி தாமரைகளில் பக்தி செய்வதை மறந்தேன்.

     உன் அழகிய திருமுகத்தை என்றும் உள்ளத்தில் தியானிக்காமல், மதம் ,
பிடித்த மாந்தரை அணுகிப் பரிதாபத்துடன் வாழ்ந்து, துராசைகளை விடமுடியாமல்,  சதா தீச் செயல்களைச் புரிந்து சபலம் நிறைந்தவனானேன்.

      மானிட சன்மம் கிடைத்ததற்கரியதென்று பரமானந்தம் அடையாமல், மதம் ,
பொறாமை, காமம், கருமித்தனம்,மோகம் முதலியவற்றுக்கு அடிமையாகி
மோசம் போனேன்.

     முதல் வருணத்தில் பிறந்தவனாயினும் நான்காம் சாதியினர் புரியும் தொழில்களை மேற்கொண்டேன். கீழ்மக்களை அடுத்துச் சாரமற்ற மதங்களைச்
சாதிக்க தாறுமாறாக நடந்தேன்.

     பெண்களுக்க்காகச் சிலகாலமும்,சொத்திர்க்காகச் சிலகாலமும், பணம் சிலகாலமுமாகச் திரிந்தேன்!தியாகராஜனின் நேசனே!என் போன்ற (பாவியை காப்பாற்ற எந்த அரசகுமாரன் வரப்போகிறான்?)

No comments:

Post a Comment